"கலை ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா " என்ற ஒற்றை வசனத்தை ஒரு படமே உணர்த்தி சொன்னால் எப்படி இருக்கும்? அதற்கான விடையை Dead poets society. இதனுடன் சேர்த்து மாணவர்கள் வாழ்வில் ஒரு ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கமும் அந்த ஆசிரியருக்கு மாணவர்கள் செய்யும் மரியாதையும் தான் படத்தின் பயணமாக அமைந்த திரைக்கதை.
டீன் ஏஜ் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் புதிய ஆங்கில பேராசிரியராக வந்து சேர்கிறார் ஜான் கீட்டிங். பின் அவர்களுக்கு பாட புத்தகத்தை தாண்டி வாழ்க்கையின் அருமையை,கற்றல் தாண்டி கிடைக்க வேண்டிய அனுபவித்தை, வாழ்க்கையை புது விதத்தில் காணும் கண்ணோட்டத்தை என மாணவர்களுக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் கண்கள் நனைய வாழ்ந்து காட்டுவதே இப்படம். இது எதுவும் போதிக்காமல், documentary போல் அமைக்க படாமல் இருப்பதே இப்படத்தின் சிறப்பு
நாம் படிக்கும் கல்வி என்பது தொழிற்முறைக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஆன கருவியே, ஆனால் கலையோ காதலோ தான் நம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் சாரம்சங்கள் என்பது படத்தில் வரும் வசனம். இதை கவிதை என்ற ஒரு கலையை முன் வைத்து கவிஞர்களுக்காக படத்தில் சொன்னாலும் உலகிலுள்ள ஏனைய கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும்.
படத்தில் பேராசிரியராக நடித்த ராபின் வில்லியம்ஸ் என்ற மகத்தான கலைஞன் அவ்வளவு பரிவாக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் அப்படியே நிஜ பேராசிரியராக வாழ்ந்திருப்பார். கூடவே மாணவர்கள் அனைவரின் நடிப்பும் சிறப்பாக துணையாக அமைந்திருக்கும்.
"Oh captain, My captain", carpe diem என படத்தின் வசனங்கள் படம் பார்த்து முடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இயற்கையின் துணையோடு அமைந்த ஒளிப்பதிவு, மென்மையான இசை படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு.
மனதில் சலனங்கள் ஏற்படுத்தினாலும் ஒரு Positive vibe யும் புத்துணர்ச்சியையும் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் Feel good movie.
- Prem ❤