Tuesday, June 22, 2021

தர்மதுரை (2016) :


படத்தில் மூன்று விதமான காதல் உணர்வுள்ள பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் வருகிறார்கள். 

1. ஸ்டெல்லா: தான் விரும்பும் ஆண் நண்பனிடம் வெளிப்படையாக தன் காதலை சொல்பவள்.
2. சுபாஷிணி: தன் காதலை தனக்குளே மறைத்து வைத்து அந்த ஆணுடன் நட்புடன் பழகுபவள்.
3. அன்பு செல்வி: தன்னை பிடித்ததாக வந்து சொல்லும் தனக்கு ஓரளவுக்கு பரிச்சியப்பட்ட ஆணிடம் தன் அப்பாவின் கல்யாண சம்மதத்துடன் காதலிக்கும் கிராமத்துப் பெண்.
- இந்த மூவரையும் நன்றாக புரிந்து கொள்ளும் தர்மதுரை, ஸ்டெல்லாவிடம் தன் இள வயதையும் சூழ்நிலையையும் எடுத்து சொல்லி எதிர் காலத்தில் உனக்கு இதே அன்பு என் மேல் இருந்தால் அப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், சுபாஷிணி தன் கணவனை பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கல்லூரியில் தன்னை ஒரு தலையாய் காதலித்தாக தெரிந்த பிறகு அதனுடே இனி நாம் living together வாழ்க்கை வாழலாம் என்பதும், அன்பு செல்வியின் ஆசைபடியே பெண் பார்க்கும் படலம் முடிந்து பெற்றோர் சம்மதத்துடன் முழுமையாக காதலிப்பது என தர்மதுரை  Mature ஆக கையாள்வது என ஆண்-பெண் உறவு, காதல், உளவியல் தான் இந்த படத்தின் ஆகச் சிறந்த சிறப்பு. 

படத்தை தன் தோளில் சுமப்பது விஜய் சேதுபதி. தன் வாழ்க்கையில் நிகழும் Active - inactive, Pause - restart, மூன்று பெண்களின் காதலை கையாளும் விதம் என பல்வேறு நிலைகளை நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார். தன் மகன் வாழ்க்கையை வெறுத்து தோல்வியில் இருக்கும் போது அவனுக்கு துணை நிற்பதும், தன் மகன் கோபத்தில் கொலை செய்ய துணியும் போது அவனை தடுத்து கட்டியணைத்து ஆறுதல் படுத்துவதும், மற்றவர்களால் தன் மகன் உயிருக்கு ஆபத்து வரும் போது அவனை வீட்டை விட்டு வெளியேற்றி அவனை காப்பாற்றுவதும் என ராதிகா ஒரு கிராமத்து தாயை அவ்வளவு அழகாக நடித்திருப்பார்.

மேலும் படத்தில் இலவச மருத்துவம், மருத்துவர்களின் கண்ணியம், மாணவர்களுக்கு ஆசிரியர் மேல் இருக்கும் மரியாதை, அந்த ஆசிரியருக்கு காமராஜர் மேல் இருக்கும் மரியாதை, பெண்ணின் அன்பால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வருவது,திருநங்கையின் கஷ்டம்,மறுமணம், கால்நடைகள்,மலைகிராமம், கிராமத்தின் எளிய மக்கள், கோயில்கள்,வயல்வெளி, நூலகம், கணவாய் என இவ்வளவையும் விரிவாக Nativity + geography சேர்த்து தந்த சீனு ராமசாமி சமகால இயக்குனர்களின் ஆக சிறந்த படைப்பாளி..

- Prem ❤

Monday, June 14, 2021

பருத்திவீரன் (2007) :



ஒரு கிராமம் - அதற்குள் இருக்கும் பொட்டல் காடு,ஆலமரங்கள்,செம்மண் புழுதி,ஆட்டுக்குட்டிகள்,சிறுதெய்வ வழிபாடு,கிராமிய கலைகள்,பனைமரங்கள்,ஓலை குடிசைகள்,மாட்டு வண்டிகள்,கருமேகம்,சுட்டெரிக்கும் சூரியன்,மீசை வைத்த தலைப்பாக்கட்டுகள்,அலப்பறை செய்யும் இளவட்டங்கள்,அப்பாவி தாய்மார்கள்,அப்பத்தாக்கள்,கரிசல் நிலம்,திருவிழா,மக்களின் பேச்சுவழக்கு,அரிவாள்,சட்டம் என அந்த கிராமத்தில் நம்மையும் கூட சேர்த்து உலாவவிட்ட படம் என்றால் அது பருத்திவீரன் தான்.

இப்படிப்பட்ட கிராமத்து சூழலில் ஒரு உயிரோட்டமான காதல் - அதை சுற்றி பின்னப்பட்ட சாதி வெறி - அதனூடே நடக்கும் வெட்டு குத்து,கொலை,ரத்தம் என படம் பேசிய விஷயங்கள் ஏராளம்.

ஒரு பெண்ணின் மேல் ஆண் காதல் கொண்டு அவளின் பின்னால் சுற்றி வருவது,அவள் மேல் தீவிரமாக இருப்பது என்பது தான் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் முத்தழகு தன் அறியா பருவத்தில் முளைத்த காதலால் பருத்திவீரன் பின்னால் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது, அவனை தனதாக்கிக் கொள்ள வீரமும் மிடுக்குடனும் திரிவது, அவனுக்காக அப்பாவுடன் சவால் விடுவது என வித்தியாசமாக ஆக Characterization அமைக்கப்பட்டிருக்கும். அந்த துடிப்பும் வேகமும் நிறைந்த முத்தழகாக பிரியாமணி கம்பீரமாக நடித்திருப்பார்.

லந்து லவுட்டு செய்யும் சண்டியராகவும் தனக்குள் காதல் வந்தவுடன் ஆண்களுக்குள் இருக்கும் வெட்கத்தை வெளிப்படுத்தும் வெள்ளந்தி என பருத்திவீரனாக தன் அறிமுக படத்திலேயே கார்த்தி அசத்தியிருப்பார். உயிர் குலைய வைக்கும் அந்த கிளைமேக்ஸில் இருவரும் தாங்கள் அதுவரை இருந்த கதாபாத்திர கோட்பாட்டில் இருந்து விலகி வேறு ஒரு நடிப்பு தளத்தில் நடித்திருப்பார்கள்.

செவ்வாழை,கழுவன்,குட்டி சாக்கு,பொணந்தின்னி,டக்லஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தில் இவர்கள் கூடவே பயணித்திருப்பார்கள்‌.

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது போல் யுவன் சங்கர் ராஜா மண் மணம் மாறாத நாட்டுப்புற இசையால் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார்.

பாரதிராஜா 80's ,90‌'sகளில் இருந்த கிராமத்தை திரையில் காண்பித்தார். அதற்கு பிறகான தசாப்தத்தில் கிராமத்து மனிதர்களையும் அவர்களின் வாழ்வியலையும் அச்சு அசலாக காண்பித்த இயக்குனர் என்றால் அது அமீர் தான்.

Paruthiveeran - A Raw blood shedded love story set-up in village backdrop. 👏

- Prem ❤