Sunday, August 23, 2020

குட்டியும் ஸ்ரீதரும் (துள்ளாத மனமும் துள்ளும் - முகவரி) :

இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான வாழ்க்கை சூழல்,காதல்,கோணங்கள் என இருந்தாலும் இருவரையும் இணைக்கும் ஒரே புள்ளி "இசை" என்பதால் என்னவோ அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள்,ஆசைகள் என இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றுகிறது (In my opinion).

எட்டு வருட சிறை தண்டனையால் தன் வாழ்க்கையை தொலைத்து சிறையில் இருந்து விடுதலை பெற்று வரும் குட்டி -
எட்டு வருடமாக இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு முயற்சித்து கொண்டிருக்கும் ஸ்ரீதர்.
இரு மனங்கள் விரும்புவதே காதல் என்பது போல்,
தன் குரலில் பாடும் பாடலால் நேரில் பார்க்காமலேயே தன் கனவுதேவதை ருக்குவை கவரும் குட்டி - ஒருமுறை சந்தித்த விஜியை தன் குரல் வளத்தால் ஹம்மிங் மூலம் கவரும் ஸ்ரீதர்.
நேரில் தவறான சூழ்நிலைகளால் தான் ஒருதலையாக காதலிக்கும் ருக்குவால் வெறுக்கப்பட்ட குட்டி - தன் கனவுக்காக நிஜ வாழ்க்கை காதலையே துறக்கும் ஸ்ரீதர்‌.
ருக்குவிற்கு கண் பார்வை போன பிறகு அவளால் அதிகம் நேசிக்கப்படும் குட்டி - தனக்கு வரும் வாய்ப்பு ஒவ்வொரு முறை தவறும் போதும் உறுதுணையாக நிற்கும் காதலில் திளைக்கும் ஸ்ரீதர்.
ருக்குவும் குட்டியும் சேர்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் வைன்ஷாப் ஓனரை தன் நன்நடத்தையால் சம்பாதித்திற்கும் குட்டி - தான் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சக மனிதரான சிடி கடைக்காரரை நன்மதிப்பை பெற்ற ஸ்ரீதர் (இந்த இரண்டு கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்யததும் மணிவண்ணன்)
அம்மா இறந்தவுடன் அவர் கண்ணை ருக்குவுக்கு தானம் செய்ய தன் கிட்னியை துறக்கும் குட்டி - அண்ணனுக்கு உடல் நலம் குன்றியவுடன் குடும்பத்தை வழிநடத்த தன் கனவையும் கொள்கைகையும் விட்டு கொடுக்கும் ஸ்ரீதர்.
பல வித போராட்டங்களுக்கு பிறகு இறுதியில் பாடல் பாடியே காதலியை கரம் பிடிக்கும் குட்டியும் பாட்டிற்கு மெட்டமைத்து இசையமைப்பாளர் ஆகும் ஸ்ரீதரும் ஜெயிப்பது இசையின் துணையாகவே.
முரணாக, ஸ்ரீதருக்கு ஏற்ப அமைந்துள்ளன இவ்வரிகள்
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே"
and
குட்டிக்கு ஏற்றவாறு "காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி".
-
Prem ❤

Monday, August 17, 2020

Django Unchained

 Rewatched Django Unchained after 5 years. சிறப்பான தரமான சம்பவம் From Quentin Tarantino.

முன்னமே பாக்கும் போதே Engagableஆ இருந்துச்சு. இப்போ ஒவ்வொண்ணா புரிதலோட தெரிஞ்சுகிட்ட உலக விஷயங்கள் like Black-White பின்னாடி இருக்க நிறவெறி, Politics behind usage of the word 'Niggar', Slavery on oppressed people, மனுஷன மனுஷனே ஒதுக்கி வைக்கிறது, Knowledge about Knowing QT style of ரத்தம் தெறிக்கும் film making, Samuel L Jackson ஓட other performance லாம் பத்தி புரிஞ்சுகிட்டு இப்போ பாக்கும் போது நிறைய விஷயங்கள் புலப்படுத்து.
படத்துல வர மாஸான Performance க்கு Jamie Foxx , கிளாசான Performanceக்கு. Christoph Waltz, வில்லத்தனமான role க்கு Leonardo DiCaprio & Samuel Jackson னு அட்டகாசமான Casting. DiCaprio வில்லனா இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம். படத்துக்கு மிகப்பெரிய பலம் இசை, முழுக்கவே செம மாஸா தனித்தனியா ஒவ்வொரு Portionக்கும் தீம் போட்டு தள்ளியிருக்காங்க‌. கூடவே Stylishஆன Cinematography வேற.
Django remains me of Kabali interms of things like Searching & Finding of wife by husband, Redemption,Waltz's look & costumes had resemblance of Kabali Characterization etc. இதுல Action Block ஒவ்வொன்னும் அடிப்பொலி‌. சும்மாவே Tarantino படத்துல Gun விளையாடும் ரத்தம் தெறிக்கும், இது Cow-boy kinda Genre வேற சொல்லவா வேணும். மனுஷன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடி இருக்காப்படி‌‌.
சினிமா ங்கற கலை நம்ம அறிவை வளர்க்கறது மட்டும் பயன்படுறது இல்ல. அது நம்ம அறிவை Update பண்ணிக்கவும், ஒரு விஷயத்தை இன்னும் அகலமாக பரந்து பார்க்கவும் வைக்குது‌, பல விஷயங்கள ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா தெளிவு படுத்தி பாக்கவும் வைக்குது.

- Prem ❤

Sunday, August 9, 2020

The Before Trilogy :


காதலர்களுக்கு வயது ஆகலாம். ஆனால் காதலுக்கு வயதாகாது என்பது மானுடவியல் வழக்கம். Fall in love, Being in love, Moving in love என காதலின் பரிமாணங்களை யார் வேண்டுமானாலும் நிஜத்தில் அனுபவிக்கலாம். அந்நிலைகளை திரை வழியாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து - மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களை பொருத்தி - காதலில் திளைக்க வைத்து - அவர்களின் மகிழ்ச்சியை நமக்கும் கடத்தி - நம்மையும் சிரிக்க அழ வைத்து - நமக்குள் இருக்கும் பிரிந்த காதல்,தொலைந்த காதல்,மறந்த காதல்,கூடிய காதல் என பல்வேறு காதல்களை நினைத்து பார்க்க வைக்க வெளிவந்த படங்களே Before Sunrise (1995), Before Sunset (2004) and Before Midnight (2013).
Jessie & Celine இருவரும் ரயிலில் முதன் முறையாக சந்திக்கிறார்கள். Casual ஆக பேச ஆரம்பிக்கிறார்கள் - பேசுகிறார்கள் - பேசி கொண்டே இருக்கிறார்கள் - பேசிப்பேசி பொழுதை கழிக்கிறார்கள் - நகர்வலம் வருகிறார்கள்‌‌. உரையாடல் வழியாக தங்கள் வாழ்வின் நடந்தவைகளை, தங்களின் ஆசைகளை, கருத்துக்களை நம் எண்ணங்களில் கிளைகதைகளாய் பரவ விடுகிறார்கள். அதன் பிறகு தங்களின் உறவை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதே மூன்று பாகங்கள்.
காதலை கொண்டாடுதல் என்பது தனி கலை. அப்படிப்பட்ட கலையின் மேன்மையை அதிரிபுதிரியான நிகழ்ச்சிகளை அடுக்கி Complexity சம்பவங்களால் கதையை நகர்த்தாமல் 'பேச்சுத்துணை' என்ற Conceptஜ வைத்து கனவில் நிஜமாய் நிஜத்தில் கனவாய் வசனங்களை நிறைத்து சிறு பயணமாய் போல் மென்மையாக்கி இருப்பதே இப்படங்களின் சிறப்பு.
பல Single Shot காட்சிகள். அதில் இருவரும் மட்டுமே பேசி கொள்ளும் உரையாடல் போன்ற வசனங்கள். நடிப்பு என சொல்ல முடியாத அளவுக்கு நிஜ காதலர்களாய் வாழ்ந்த இருவர். அருமையான Backdrop லொக்கேஷன்கள். நேர்த்தியான எழுத்து & இயக்கம். இவை அனைத்தும் தான் இந்த Trilogy க்கு உயிர் கொடுத்திருக்கும் பங்களிப்புகள்.
நம்மை கொண்டாடுபவர்கள் நம் அருகில் இருத்தலிலும் வாழ்க்கை முழுவதும் உடன் பயணித்தலிலும் தான் வாழ்வின் சிறப்பே இருக்கிறது. அதற்கு பெரும் பங்காய் காதல் அமைகிறது‌. இந்த கருத்துடன் Positivity விதைக்கும் விதமாக ஒருவர் நினைத்து பார்க்க Sweet Memories, Bitter Sweet Memories என காதலில் பல்சுவை உள்ளது என்ற மகோத்துவத்தை நமக்குள் விதைக்கும் படைப்பாகவே இந்த Trilogy உள்ளது.
Spread Love ❤
-Prem ❤