Monday, December 7, 2020

Dear Comrade

Dear Comrade  :

தமிழ் சினிமா தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவிதமாக தகவமைத்து கொள்ளும். ஒரே மாதிரியான கதைகள் வந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒரு புது இயக்குனர் தேவதூதன் போல் வந்து ஒரு விருட்சத்தை விதைத்து விட்டு ரசிகர்களின் ரசனையை உயரத்துவார். அப்படி 2012 ல் தமிழ் சினிமா வரலாற்றில் பல சென்டிமென்ட்களை உடைத்து தன் ஒவ்வோர் படைப்பில் வாயிலாக சமூகத்தை அக்கறையோடு அணுகும் கலகக்காரனே இயக்குனர் பா. ரஞ்சித். 

டைட்டில் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே "அட்டகத்தி" என்ற தலைப்பை வைத்து கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தி "யார் இவர்?" என்ற கேள்வியை உருவாக்கியது.

தமிழ் சினிமாவில் வடசென்னை பகுதியை தவறாக சித்தரித்து கொண்டிருந்த பல  இயக்குனர்களுக்கு மத்தியில் அதன் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்வியலையும் அவர்களை சூழ்ந்துள்ள அரசியலையும் "மெட்ராஸ்" என்ற பெயர் மூலமாக தமிழ் சினிமாவிற்கும் அந்த இயக்குனர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிய சுடர் ஒளி.

"கபாலி" என்ற பெயரை வில்லனின் அடியாட்களாக வரும் துணை கதாபாத்திரங்களுக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கும் வைத்து கொண்டிருந்த மட்டுமே வந்த படங்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தின் தலைப்பாக வைத்து கதாநாயகனுக்கு அந்த பெயரை சூட்டி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

காலாவில் கருப்பு+நீலம்+சிவப்பு வண்ணங்கள், தான் தயாரித்த பரியேறும் பெருமாளில் சாதிய அரசியலின் கோர முகம் என தான் இயக்கும் தயாரிக்கும் படங்களில் சமூகநீதி பேசும் நிஜ போராளி.

மேலும் பொதுவெளியில் Casteless Collective, கூகை திரை நூலகம், வானம் கலை திருவிழா என தன்னை சமூக செயல்பாட்டாராகவும் தன் செயல்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார். 

அவர் எழுதிய வசனம் அவருக்கே என்றும் பொருந்தும் படியாக இருக்கிறது - "நான் கால் மேல கால் போட்டு உக்காரருது தான் உன் பிரச்சினைனா நான் கால் மேல் கால் போட்டு தான் உக்காருவேன்டா ஸ்டைலா கெத்தா".
- Prem ❤

Tuesday, December 1, 2020

Emotional அண்ணாமலை :


படத்தில் ஒரு காட்சியில்

குஷ்பு to ரஜினி : கள்ளம் கபடம் இல்லாம எப்போ பார்த்தாலும் குழந்தை மாதிரி சிரிச்சுகிட்டே இருப்பீங்களே, அந்த பழைய சிரிப்ப நான் மறுபடியும் பாக்கனும்ங்க.

ரஜினி: அந்த அண்ணாமலை செத்து பல வருஷம் ஆச்சு..

இந்த உரையாடலுக்கு முன்பாக ரஜினி தனது மகள் தன் எதிரியின் மகனை விரும்புகிறாள் என அறிந்து அவளுக்கு பொறுமையாக அறிவுரை கூறி, அவள் அதை கேட்காத பட்சத்தில் அவளை ஆக்ரோஷமாக அடித்து, தன் இயல்பில் இருந்து வெளியே வந்து ருத்ரதாண்டவம் நிகழ்த்தி தன் நிலையை மனைவியிடம் கூறிவிட்டு வெறுத்து போய் நிம்மதியை தேடி வெளியே போவார். ஒரு அமைதியான இடத்திற்கு சென்று தனிமையில் நின்று கொண்டு இருக்கும்போது அவ்வழியே மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்லும் ஒருவன்,மனம் போன போக்கில் தன் நிம்மதியை பகிரும் வகையில் ஏதோ ஒரு நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டு போவான். இதை பார்க்கும் ரஜினி சட்டென ஒரு கனம் மனது இளகி, தன் பழைய நினைவுகளை கிளறி நினைத்து பார்த்து ஒரு புன்னகையுடன் ஆனந்த கண்ணீரில் நனைந்து, காரின் கண்ணாடி வழியாக தன் முகத்தை பார்த்து feel செய்வார். அதாவது நிம்மதியான பால்கார அண்ணாமலைக்கும் நிம்மதியை இழந்த இந்த அண்ணாமலைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வார். நம் எல்லோர் வாழ்விலும் இது போல் நினைத்து பார்க்க பல நல்ல பசுமையான நினைவுகளும் அதை நினைக்கும் சூழலும் அமைந்து கொண்டிருக்கும். நான் பார்த்த படங்களில் இதுவரை திரையில் இருக்கும் எந்த ஒரு நடிகனும் இப்படி Nostalgic உணர்வை படம் பார்ப்பவர்களுக்கும் இவ்வளவு நுணுக்கமாக கடத்தியதில்லை. இந்த காட்சி முடிந்தவுடன், வீட்டிற்கு வந்து தன் வாழ்வில் உள்ள முக்கிய பெண்களான அம்மா-மனைவி-மகள் முன்னிலையில் "ஒரு பெண் புறா கண்ணிரில் தள்ளாட" என்று பாசம்,வலி,இழப்பு,விரக்தியுடன் பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு முகபாவனைகள் அமைத்து கஷ்டப்பட்டு நடித்து தள்ளாமல், ரொம்ப casual ஆக பாடல் முழுவதும் தன் பழைய வாழ்க்கையின் நினைவுகளை எண்ணி பார்த்துக்கொண்டே வலம் வருவார். படத்தில் ஏகப்பட்ட மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என இருந்தாலும் மேற்குறிப்பிட்ட இந்த பத்து நிமிட காட்சியில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர பிரதிபலிக்கும் முத்தாய்ப்பாக இருக்கும் இக்காட்சி.

அண்ணாமலை வெறும் மாஸ்படம் மட்டும் அல்ல, ரஜினி என்ற Greatest Performerக்கு நடிக்க தீனி போட்ட படம்.

- Prem ❤

Saturday, November 21, 2020

Aanandam (2016) :



ஒரு நெடுந்தூர தனிமையான பேருந்து பயணத்தின் போது கேட்கும் இளையராஜாவின் பாடல்கள் நம்மை தட்டி கொடுத்து - தாலாட்டி - காற்றில் மிதக்க விட்டு - விழி நினைத்து - மனதில் உள்ள ரணங்களை மறக்க செய்து - புத்துணர்வு தருவது போல ஒரு இரண்டு மணி நேர திரைப்படம் நம்மை அவ்வாறே தாலாட்டி தன்ணுணர்வில் ஆழ்த்தினால், அதற்கான விடையே ஆனந்தம்.

அன்றாடம் நம் வாழ்க்கையில் நிகழும் விஷயத்தையோ அல்லது வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஒவ்வொருவரும் கடக்கும் நிகழ்வையோ வைத்து ஒரு முழு திரைப்படமாக தருவதில் கில்லாடிகள் கேரளத்து படைப்பாளிகள். அப்படியாக  கல்லூரி மாணவர்கள் செல்லும் Industrial Visit பயணத்தையே மையமாக வைத்து நம் உணர்ச்சிகளில் விளையாடுவதே இப்படத்தின் அடிநாதம். இதில் கேரளத்தை தாண்டி மைசூர், ஹம்பி, கோவா என கதைகளம் அமைத்து அந்த ஊர்களின் பசுமையான locationகளை துணைக்கொண்டு நம் மாணவ பருவத்தை  கண் முன்னே காட்டியுள்ளனர் இந்த படத்தின் Makers. இந்த படத்தின் Makers அனைவருக்கும் இதுவே முதல் படம்.

இளமை பருவத்தில் ஆண்களுக்குள் அரும்பும் காதல், அது ஏற்படுத்தும் அலாதியான இன்பம், காதலியின் சின்னச்சின்ன சமிக்ஞைகளில் இருக்கும் ஈர்ப்பு, அழகில் விழுந்து மெய்மறக்கும் தருணம் என பல ரசனையான நுணுக்கமாக திரையில் சொல்லியிருக்கிறார்கள். காதலை மட்டுமல்லாமல் நட்பின் உன்னதத்தையும், Friends gang ன் கலாட்டா குறும்புகளையும், காதலுக்கு நட்பு உதவுவதையும், நட்பில் வரும் சிறிய ஊடல்கள் என நட்பின் அனைத்து பரிணாமங்களையும் பதிவுசெய்ய தவறவில்லை.

Positivity என்ற விஷயத்தை எந்த கலையும் நமக்குள் எளிதாக கடத்தி விடலாம், சினிமா என்ற கலை Visually & Audibly நமக்கு அதை துளிர்க்க செய்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.

உங்களின் கடந்த கால நினைவலைகளை நினைத்து பார்த்து அதில் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களையும்,  சோகங்களையும், புதைந்து கிடக்கும் குற்றவுணர்ச்சிகளையும், இப்பொழுது தெரியும் சிறுபிள்ளை தனமான நிகழ்ச்சிகளையும் மீட்டெடுக்கும் அழகான படமே ஆனந்தம்.
- Prem ❤

Saturday, November 7, 2020

Hey Jude (2018) :



காதல் இல்லாமல் பழகும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அன்பும் நட்பும் அக்கறையுமே திளைத்தோங்கும். கூடவே இவர்களுக்குள்ளும் வரும் கோபங்களும் முரண்பாடுகளும் சிறிது கால பிரிவுகளும்.
குறைபாடுகளை தகர்த்து அதனுள் ஊடுருவி நிறைகளை தேடுவது அன்பு. தங்களுக்கு அமைந்த வாழ்க்கை சூழலில் இரண்டு Extreme குறைபாடுகளில் இருக்கும் இருவருக்குள் நடக்கும் நிகழ்வுகளே Hey Jude. 

Autism(மதியிறுக்கம்) குறைப்பாடுள்ள ஜூடும் Bipolar Disorder (இருமுனை பிறழ்வு) குறைப்பாடுள்ள கிரிஸ்டலும் ஆரம்பத்தில் மோதலில் சந்தித்து சண்டையிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவருக்கொருவர் மற்றவருக்கு இருக்கும் குறைபாடுகளை அறிந்து அதில் இருந்து வெளி வர உதவி செய்து கொள்கிறார்கள் நண்பர்களாய். அவர்களால் முழுதும் தங்களை மாற்றிக் கொள்ள முடிந்ததா? மற்றவரை புரிந்துகொள்ள முடிந்ததா? என்பதை பற்றி மென் நகைச்சுவை கலந்து யதார்த்தமாக படம் பேசுகிறது. 

படத்தில் முதலில் கவனிக்க பட வேண்டியது முதன்மை கதாபாத்திரங்களின் Characterization. உலகத்தோடு தன்னை இணைத்து கொள்ளாத ஜுடுக்கு கடல் சார்ந்த விஷயங்கள் ( Oceanography) பிடிப்பதே போல் அமைத்ததும், கோபம் சோர்வு என இரண்டிலும் பயணிக்கும் கிரிஸ்டலை இசையோடு இணைத்ததும் இயக்குனரின் Brilliance. இருவரின் தந்தை கதாபாத்திரங்களும் கவனிக்கப்பட வேண்டியதே.

மலையாள நடிகர்களில் நான் பார்த்து வியந்தது - தங்களின் Star value ஏற்ற கதைகளை தேர்வு செய்யாமல் தங்களுக்கு வரும் Scriptல் இருக்கும் கதாபாத்திரங்களில் தங்களை பொருத்தி கொள்ளுவது தான். Autism குறைபாடுள்ள இளைஞனாக பிசகாமல் வித்யாசமான Mannerism காட்டி அதே வேளை இயல்பாகவும் படம் முழுக்க ஜூடாக இருக்கிறார் நிவின் பாலி.   கிரிஸ்டலாக நம் திரிஷா, மலையாளத்தில் இது இவருக்கு முதல் படம். எப்படி லேசா லேசா வில் தன்னை சுற்றிய கதை அமைந்ததோ அதோபோல் இதிலும் ஜீட்க்கு நிகரான கதாபாத்திரம்‌.

ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன். அங்கமாலி டைரிஸ்,சர்க்கார்,ஜல்லிக்கட்டு போன்ற படங்களில் தன் திறமையை நிரூபித்தவர். 75 சதவீத படம் கோவாவில் நடப்பதால் இதிலும் Fresh ஆக தன் ஒளி ஓவியத்தை நிகழ்த்தியுள்ளார்.

உலகத்திற்கு வித்தியாசமாக தெரிந்தாலும் தங்கள் உலகத்திற்கும் தங்களுடன் இருக்கும் மனிதர்களுக்கும் Special ஆக இருப்பவர்களின் வாழ்வியலே Hey Jude.

- Prem ❤

Sunday, November 1, 2020

Kumbalangi Nights :


கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் இருக்கும் தீவு போல் அமைந்த குக்கிராமமே கும்பளாங்கி‌. அங்கு வாழும் மனிதர்கள், அவர்களின் மீன் பிடி தொழில், வலையை லாவகமாக வீசி கண்கள் ஈர்க்கும் வகையில் மீனை பிடிக்கும் விதம், அவர்களின் கடல் சார்ந்த உணவு பழக்கவழக்கங்கள், பொழுது போக்கு, உறவுகள், அந்த தீவை சுற்றி முழுவதும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பசுமை நிறைந்த மரங்கள்,காடுகள், கடல்,காயல், ரம்மியமான காற்று, படகு வழி போக்குவரத்துகள், வெளி மாநிலத்தாருக்கும் வெளிநாட்டினருக்கும் ஏற்ற சுற்றுலா ஸ்தலம் என ஒரு கிராமத்தின் முழு வாழ்வியலே இப்படத்தில் விரவி கிடக்கிறது..

கேரளா என்றாலே எழில் கொஞ்சும் அழகு. இதில் இயற்கையோடு சேர்த்து பசுமை நிறைந்த பேரழகை காட்டிய ஒளிப்பதிவாளரும், படம் முழுக்க மெல்லிய இசையுடன் பயணம் செய்த இசையமைப்பாளும் நம் இடத்தில் இருந்தே நம்மை கும்பளாங்கி பகுதிக்கு கொண்டு சென்றது போல் உணர வைத்துள்ளனர்.. 

Perfect casting என சொல்லும் விதமாக கண்கள் பேசும் நடிப்பு அரக்கன் Fahad Fasil, முதிர்ச்சியான நடிப்புடன் எளிமையான Soubin Shahir,காதல் சொட்டும் சின்ன சின்ன முகபாவங்கள் உடன் வலம் வரும் Shane Nigam, பார்த்தவுடன் பிடித்துவிடும் Cute heroine என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் சிறப்பு..

முதல் பாதியில் படம் மெதுவாக நகர்ந்தாலும்  கும்பளாங்கியின் அன்றாட வாழ்க்கை முறை, அங்கு சந்தோஷமாக வாழும் மக்களின் Characteziation என நமக்கு வேறொரு வாழ்வியலை தந்த writer + directorக்கு சபாஷ்..

ரசனையான படைப்புகளை தருவதில் கேரள சினிமாவினர் என்றுமே கில்லாடிகள் தான். அதுவும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ள வெவ்வேறு மக்களின் பண்புகள்,குடும்பம், நட்பு, காதல் என கோர்வையாக கோர்த்து கும்பளாங்கி பகுதியின் அழகியலையும் சேர்த்து என Feel good படைப்பாக அமைந்து இருக்கிறது இந்த கும்பளாங்கி நைட்ஸ்...

- Prem ❤

Friday, October 9, 2020

Dead Poets Society (1989)


"கலை ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா " என்ற ஒற்றை வசனத்தை ஒரு படமே உணர்த்தி சொன்னால் எப்படி இருக்கும்? அதற்கான விடையை Dead poets society. இதனுடன் சேர்த்து மாணவர்கள் வாழ்வில் ஒரு ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கமும் அந்த ஆசிரியருக்கு மாணவர்கள் செய்யும் மரியாதையும் தான் படத்தின் பயணமாக அமைந்த திரைக்கதை.

டீன் ஏஜ் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் புதிய ஆங்கில பேராசிரியராக வந்து சேர்கிறார் ஜான் கீட்டிங். பின் அவர்களுக்கு பாட புத்தகத்தை தாண்டி வாழ்க்கையின் அருமையை,கற்றல் தாண்டி கிடைக்க வேண்டிய அனுபவித்தை, வாழ்க்கையை புது விதத்தில் காணும் கண்ணோட்டத்தை என மாணவர்களுக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் கண்கள் நனைய வாழ்ந்து காட்டுவதே இப்படம். இது எதுவும் போதிக்காமல், documentary போல் அமைக்க படாமல் இருப்பதே இப்படத்தின் சிறப்பு

நாம் படிக்கும் கல்வி என்பது தொழிற்முறைக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஆன கருவியே, ஆனால் கலையோ காதலோ தான் நம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் சாரம்சங்கள் என்பது படத்தில் வரும் வசனம். இதை கவிதை என்ற ஒரு கலையை முன் வைத்து கவிஞர்களுக்காக படத்தில் சொன்னாலும் உலகிலுள்ள ஏனைய கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும்.

படத்தில் பேராசிரியராக நடித்த ராபின் வில்லியம்ஸ் என்ற மகத்தான கலைஞன் அவ்வளவு பரிவாக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் அப்படியே நிஜ பேராசிரியராக வாழ்ந்திருப்பார். கூடவே மாணவர்கள் அனைவரின் நடிப்பும் சிறப்பாக துணையாக அமைந்திருக்கும்.

"Oh captain, My captain", carpe diem என படத்தின் வசனங்கள் படம் பார்த்து முடித்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இயற்கையின் துணையோடு அமைந்த ஒளிப்பதிவு, மென்மையான இசை படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு.

மனதில் சலனங்கள் ஏற்படுத்தினாலும் ஒரு Positive vibe யும் புத்துணர்ச்சியையும் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் Feel good movie.

- Prem ❤

Saturday, October 3, 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே ;

பேய் படம் பார்த்தால் தான் நமக்கு பயம் வர வேண்டும் என்பதில்லை. ஆழ் மனதின் அமைதியை உருக்குலைத்து குற்ற உணர்ச்சியை கிளர்த்திவிடும் ஒரு காட்சியே போதும் அச்சம், கண்ணிர், மனச்சிதைவு என எல்லாவற்றையும் உள்ளுக்குள் இருந்து எடுத்து பிரளயம் போல் வெடிக்க செய்து விடலாம். அப்படி அமைந்த காட்சியே மகாநதியில் கமல் தன் மகளை விபச்சார விடுதியில் இருந்து மீட்டு வரும் காட்சி. "மகாநதி" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு முதலில் அந்த காட்சியும், அதனால் ஏற்படும் சலனமும் வேதனையும் தான் நமக்குள் இருக்கும் மனிதத்தை துளிர்க்க செய்வதும், ஆண் என்ற அகந்தையை அசைத்து பார்ப்பதும்‌.

காணாமல் போன தன் மகள் கல்கத்தாவில் சோனாகச்சி என்ற ஏதோவொரு இடத்தில் இருக்கிறாள் என அறிந்து கமல் அங்கு செல்வதும் - நேரில் அந்த இடத்தை பார்த்து அதன் சூழ்நிலையை புரிந்தவுடன் மனதில் ஏற்படும் "பதற்றமும்" - உள்ளே சென்று தேடிய பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் தன் மகள் அங்கு இல்லை என்று "ஆசுவாச" படுவதும் - சட்டென அடுத்த நொடி தன் மகளை பார்க்க கூடாத இடத்தில் பார்க்க கூடாத கோலத்தில் பார்த்தவுடன் ஏற்படும் "வலியும்" - அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் மகள் விலகி சென்றாலும் அவளை "தழுவதும்" - பின் சுதாரித்து கொண்டு அவளை தூக்கிக்கொண்டு "பதறி" வெளியே ஓடி வருவதும் - அங்கே அவர்களை பிடித்து வைத்து கொண்டு ப்ரோக்கர் பணம் கேட்கும்போது "குமுறுவதும்" - மற்ற விலைமாதர்கள் அனைவரும் காசு திரட்டி அவனுக்கு வழங்குவதை பார்த்து "நெகிழ்ச்சி" அடைவதும் - அவர்களுக்கு கூனி குறுகி நன்றி தெரிவிப்பது என இத்தனை உணர்வுகள் நிகழ்ந்தது கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல, அந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொரு அண்ணன், தம்பி, அப்பா, மகன், கணவன்,தோழன் என அனைத்து ஆண்களுக்கும் தான்.

இவ்வளவு கனம் மிகுந்த இக்காட்சியில் மனசை ஆறுதல் படுத்துமாறு வரும் வசனம் - ஒரு விலைமாதர் அந்த பெண்ணை பார்த்து "சிரிடி. உன் தெய்வம் வந்திருக்கு , உன்னை கூட்டிட்டு போக" என்று சொல்வது தான்.

ஒருபுறம் மகள் பருவமடைந்த போது அவளை ஜெயில் கம்பி வழியாக ஆதங்கத்தோடு பார்த்த கிருஷ்ணசாமி அதே மகளை சோனாகச்சியில் ஆற்றாமையோடு பார்ப்பது என்று கமல் என்ற நடிகன் வித்தியாசம் காட்ட, மறுபுறம் பாவத்தை தொலைக்கும் கங்கை நதிக்கரையில் தன் செல்வத்தை கண்டுபிடிப்பதாக காட்சி அமைத்த திரைக்கதை ஆசிரியர் கமல் கவனிக்க பட வேண்டியவர். 

After all these Haunting moments, now Ilayaraja entered with his Harmonium music for consoling our souls & followed by Kamal in his voice singing எங்கேயோ தெக்கு திசை காணாத தூரம் தான்...

- Prem ❤

Sunday, September 27, 2020

பரியனை சுற்றியுள்ள மனிதர்கள் :


சாதியும் அதன் படிநிலைகளும் கட்டமைப்பும் உள்ள சமூக சூழலில்,கிராமத்திலிருந்து இருந்து கல்லூரிக்கு சட்டம் படிக்க வருகிறான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவனான பரியன். அவனை சக மனிதனாக பார்த்து ஆதரிக்கும் மனிதர்களும், அவனின் சாதியை முன்னிறுத்தி வெறுக்கும் சாதிவெறியர்களும் - இவர்களின் தாக்கமும் தான் அவன் படித்து பட்டம் பெறுகிறானா?இல்லையா? என்று தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட இருவேறு தன்மை கொண்டவர்களின் முகங்கள் :

அன்பு மட்டுமே நிறைந்த ஜோ. பரியனின் தோழி, தேவதை. தன்னை சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாதி சாக்கடையை பற்றி அறியாத ஒரு நல்ல மனசுக்காரி.

தன் சாதியில் உள்ள சக மிருகங்களுக்கு பயப்பட்டு பரியனிடம் " உன் கூட சேர்த்து என் பொண்ணையும் கொண்ணு போட்றுவானுக" என மகளின் காதலை ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மதில் மேல் பூனையாக சாதிப்பற்றுடன் வாழும் ஜோவின் தந்தை.

தன் மீதும் அரசியல் மூலமாக சாதி பின்னப்பட்டிருந்தாலும் அதை எல்லாம் பார்த்து பழகாமல் பரியனுக்கு உண்மையான நண்பனாக வரும் யோகிபாபு‌.

"அம்பேத்கர் மாதிரி ஆக வேண்டும்" என பரியன் சொன்னவுடன் அவனை கலகக்காரனுக்கு மேலே பார்க்கும் ஒரு 'வகையான' கல்லூரி முதல்வர் & அதே வார்த்தையை படித்தவுடன் பரியனை அழைத்து படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லி சமன் செய்யும் மற்றோரு 'வகையான' முதல்வர்.

கோட்டாவில் வந்ததை பொறுத்து கொள்ள முடியாமல் அதை குத்தி காட்டும் Male ஆங்கில ஆசிரியர் &" காலத்துக்கும் BABL மேல கோடு வராம பாத்துக்கோ" என கரிசனத்துடன் சொல்லும் தேவதை டீச்சர்‌. இந்த முரணானது பரியன் பிற்காலத்தில் பிரச்சனையில் ஈடுபடும்போது ஆங்கில ஆசிரியர் முதல்வரிடம் அவனை சஸ்பெண்ட் செய்ய சொல்வதும் & தேவதை டீச்சரோ "என்ன சார் நீங்களே அவனை என்ன வேணாலும் பண்ண சொல்றீங்க, சண்டை போட போறான்" என ஆதங்க படும் போதும் கூட வெளிப்படும்‌.

காலகாலமாக தொடர்ந்து ஆணவக்கொலையை ஒரு சேவை போல் செய்து கொண்டிருக்கும் சாதிதிமிர் நிறைந்த ஒரு பழங்கால தாத்தா.

இவர்கள் ஒவ்வொரும் பரியனை கையாளும் விதத்தில் தான் அவன் சமாதானம் அடைவதும்,எதிர்ப்பதும்,திருப்பி அடிப்பதும் என படம் கூறுகிறது. If equality is denied everything is denied என்ற சூழலே பரியனை 'நான் யார்?' என கேள்வி கேட்க வைக்கிறது. இதன் நீட்சியே கிளைமேக்ஸில் டீ டம்ளர் மூலமாக "அனைவரும் சமம்" என உண்மையை உணர்த்துகிறது.
 - Prem ❤

Thursday, September 10, 2020

Charlie & Neelakasham Pachakadal Chuvanna Bhoomi (NPCB) :

தேடல் - பிறந்தது முதல் இறப்பது வரை மனிதன் வாழ்க்கையில் எதாவது ஒன்றை தேடிக் கொண்டே இருக்கின்றான்.

பயணம் - தன்னை தானே உணர்ந்து கொள்ளவும் வாழ்க்கையில் புதுவிதமான அனுபவம் பெறவும் பயணம் மேற்கொள்கிறான்.

தேடலையும் பயணத்தையும் வேறொரு குறிப்பிட்ட நபருக்காக அர்பணித்து ஒருவருக்கு கிடைக்கும் தன்னுணற்வை பற்றியே சார்லியும் NPCBயும் கவித்துவமான காட்சிகளால் பேசுகிறது.

சார்லி என்ற முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவனை பற்றி தனக்கு கிடைத்த குறிப்பு புத்தகத்தின் வாயிலாக அவனை பற்றி தெரிந்து கொண்டும் மற்றவர்கள் செவி வழியாக சொல்வதை கேட்டும் அவன் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டு அவனை தேடி செல்கிறாள் டெஸ்ஸா. சார்லியால் உதவி பெற்ற பலர் வாயிலாக சார்லியின் குணத்தை பற்றி தெரிந்து கொண்டு அவள் மீது காதல் வயப்படுகிறாள். அவனை சந்திக்கும் தருணத்தில் அவளது தேடலுக்கும் காதலுக்கும் விடையே Charlie.

தன் காதலியை தேடி கேரளாவில் இருந்து நாகலாந்திற்கு Road travel மூலமாக பயணப்படுகிறான் கசிம். தான் செல்லும் வழியில் அவனை போலவே Road trip மேற்கொள்ளும் ஒரு நண்பர்கள் குழு, கொல்காத்தவில் உள்ள குறுநில கிராம மக்கள், கொல்கத்தா தாண்டி ஒரு நெடுஞ்சாலையில் தனியாய் சைக்கிள் கடை நடத்தும் மலையாளி, அஸ்ஸாமில் கலவரத்தில் மாட்டிக்கொண்ட சிறுமி என ஒவ்வொரு மனிதர்களும் கசிமின் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த தாக்கங்களோடு தன் காதலியுடன் சேர்ந்தானா? என்பதை பேசுகிறது NPCB.

படங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இந்த இரண்டு முதன்மை கதாபாத்திரங்களும் அவர்களின் பயணங்களில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் வாழ்வியலும், தேடலில் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், அடையும் ஆனந்தங்களும், நீண்ட தூர பாதைகளும், இவர்களின் இலக்குகளும் என இரு படங்களுமே வாழ்வின் நிதர்சனமான தத்துவங்களை பற்றி பேசுகிறது.

ஆணை தேடி ஒரு பெண்ணும் பெண்ணை தேடி ஒரு ஆணும் என இருபாலரும் தங்களின் Perceptionல் கதையை நகர்த்துவதும், தங்கள் உள் மனத்தில் பேசிக்கொண்டே அகத்தை உணர்ந்து கொள்வதும், வாழ்க்கையின் அர்த்தத்தை தாங்கள் மேற் கொள்ளும் பயணங்களில் புரிந்து கொள்வதும் என நம்மை அந்த கதாபாத்திரங்களினூடே எளிதாக இணைத்து கொள்ள முடிகிறது. 

Yet another feel good Movies from Malayalam Film Industry 👌.
- Prem ❤

Thursday, September 3, 2020

Ustad hotel (2012) Malayalam :


"வயிறு நிறையற மாதிரி யாரு வேணாலும் சமைக்கலாம். ஆனா சாப்பிடறவன் மனசும் நிறையனும்".

 - படத்தில் வரும் வசனம். இதுவே இப்படத்தின் அடிநாதம். கேரளாவும், அந்த மக்களின் உணவின் ரசனையும், சமைக்கும் விதமும்,கைப்பக்குவமும்,ஈகை குணமும்,கடலும்,அன்பும்,நட்பும் என படம் பேசும் பேசு பொருட்கள் ஏராளம். கூடவே தாத்தாவிற்கும் பேரனுக்குமான உன்னத உறவை மென்மையாக சொல்லியிருக்கிறார்கள் ஸ்கிரிப்ட் எழுதிய அஞ்சலி மேனனும் இயக்குனர் அன்வர் ரஷிதும்.

'உஸ்தாத்' என்றால் மாஸ்டர் என்று மலையாளத்தில் பொருள். அதற்கேற்ப ஒரு கடற்கறையோரம் இருக்கும் உணவகத்தை நடத்திக் கொண்டிருக்கும் வயதான முதலாளிக்கு உணவின் பாலுள்ள பற்று,ஈடுபாடு,அக்கறை என உணவுக்கும் மனிதனுக்கும் உள்ள காதலை படம் கவித்துவமாக வெளிப்படுத்துகிறது. சமையல் கலையின் மேலுள்ள உணர்வை இவ்வளவு துல்லியமாக வேறு எந்த நடிகனாலும் வெளிப்படுத்த முடியாது. திலகன் என்ற சிறந்த நடிகன் கரீம் இக்காவாக வாழ்ந்து காட்டினார். இதுவே அவரின் கடைசி படம்.

பிடித்தது செய்ய முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் பகட்டான வாழ்க்கையை தூக்கி எறிந்து சொந்த நாட்டிற்கு வந்து மனதுக்கு பிடித்த Chef வேலை பார்த்து தன் தாத்தாவின் பாரம்பரியத்தை தொடரும் இளைஞன் துல்கர் சல்மான் தன் அப்பாவிற்கும் தாத்தாவுக்கும் இடையே உறவுகளின் மேன்மையை நிலை நிறுத்துகிறார். 

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பசியால் வாடும் மனிதர்களுக்கு உணவு வழங்குதலின் மேன்மையையும் தேவையையும் உணர்த்தும் விதமான காட்சிகளும் படத்தில் உண்டு. 

படம் முழுக்கவே உணவு தான் பிரதான அம்சமாய் சுழன்று கொண்டிருக்கிறது. பிரியாணி, சுலைமாணி(கட்டஞ்சாயா), அசைவங்கள் என பல்வேறு விதமான உணவுகள் பற்றியும் படத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டுகிறது. இதற்கேற்ப வசனங்களும், ஒளிப்பதிவும், இசையும் துணை நின்றிருக்கிறது‌.

படத்தில் வரும் மற்றொரு Heart touching உண்மையான வசனம் :

"பெரும்பாலும் மனித உயிர்கள் எந்த விஷயத்திலும் திருப்தியடைய மாட்டார்கள். மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சாப்பாட்டு விஷயத்தில் அப்படி இல்லை. ஒருவரின் வயிறு நிரம்பி விட்டால், போதும் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்".

Ustad Hotel - பல உண்மைகளை பிரதிபலிக்கும் படைப்பு‌.

- Prem ❤

Sunday, August 23, 2020

குட்டியும் ஸ்ரீதரும் (துள்ளாத மனமும் துள்ளும் - முகவரி) :

இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான வாழ்க்கை சூழல்,காதல்,கோணங்கள் என இருந்தாலும் இருவரையும் இணைக்கும் ஒரே புள்ளி "இசை" என்பதால் என்னவோ அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள்,ஆசைகள் என இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றுகிறது (In my opinion).

எட்டு வருட சிறை தண்டனையால் தன் வாழ்க்கையை தொலைத்து சிறையில் இருந்து விடுதலை பெற்று வரும் குட்டி -
எட்டு வருடமாக இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு முயற்சித்து கொண்டிருக்கும் ஸ்ரீதர்.
இரு மனங்கள் விரும்புவதே காதல் என்பது போல்,
தன் குரலில் பாடும் பாடலால் நேரில் பார்க்காமலேயே தன் கனவுதேவதை ருக்குவை கவரும் குட்டி - ஒருமுறை சந்தித்த விஜியை தன் குரல் வளத்தால் ஹம்மிங் மூலம் கவரும் ஸ்ரீதர்.
நேரில் தவறான சூழ்நிலைகளால் தான் ஒருதலையாக காதலிக்கும் ருக்குவால் வெறுக்கப்பட்ட குட்டி - தன் கனவுக்காக நிஜ வாழ்க்கை காதலையே துறக்கும் ஸ்ரீதர்‌.
ருக்குவிற்கு கண் பார்வை போன பிறகு அவளால் அதிகம் நேசிக்கப்படும் குட்டி - தனக்கு வரும் வாய்ப்பு ஒவ்வொரு முறை தவறும் போதும் உறுதுணையாக நிற்கும் காதலில் திளைக்கும் ஸ்ரீதர்.
ருக்குவும் குட்டியும் சேர்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் வைன்ஷாப் ஓனரை தன் நன்நடத்தையால் சம்பாதித்திற்கும் குட்டி - தான் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சக மனிதரான சிடி கடைக்காரரை நன்மதிப்பை பெற்ற ஸ்ரீதர் (இந்த இரண்டு கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்யததும் மணிவண்ணன்)
அம்மா இறந்தவுடன் அவர் கண்ணை ருக்குவுக்கு தானம் செய்ய தன் கிட்னியை துறக்கும் குட்டி - அண்ணனுக்கு உடல் நலம் குன்றியவுடன் குடும்பத்தை வழிநடத்த தன் கனவையும் கொள்கைகையும் விட்டு கொடுக்கும் ஸ்ரீதர்.
பல வித போராட்டங்களுக்கு பிறகு இறுதியில் பாடல் பாடியே காதலியை கரம் பிடிக்கும் குட்டியும் பாட்டிற்கு மெட்டமைத்து இசையமைப்பாளர் ஆகும் ஸ்ரீதரும் ஜெயிப்பது இசையின் துணையாகவே.
முரணாக, ஸ்ரீதருக்கு ஏற்ப அமைந்துள்ளன இவ்வரிகள்
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே"
and
குட்டிக்கு ஏற்றவாறு "காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி".
-
Prem ❤

Monday, August 17, 2020

Django Unchained

 Rewatched Django Unchained after 5 years. சிறப்பான தரமான சம்பவம் From Quentin Tarantino.

முன்னமே பாக்கும் போதே Engagableஆ இருந்துச்சு. இப்போ ஒவ்வொண்ணா புரிதலோட தெரிஞ்சுகிட்ட உலக விஷயங்கள் like Black-White பின்னாடி இருக்க நிறவெறி, Politics behind usage of the word 'Niggar', Slavery on oppressed people, மனுஷன மனுஷனே ஒதுக்கி வைக்கிறது, Knowledge about Knowing QT style of ரத்தம் தெறிக்கும் film making, Samuel L Jackson ஓட other performance லாம் பத்தி புரிஞ்சுகிட்டு இப்போ பாக்கும் போது நிறைய விஷயங்கள் புலப்படுத்து.
படத்துல வர மாஸான Performance க்கு Jamie Foxx , கிளாசான Performanceக்கு. Christoph Waltz, வில்லத்தனமான role க்கு Leonardo DiCaprio & Samuel Jackson னு அட்டகாசமான Casting. DiCaprio வில்லனா இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம். படத்துக்கு மிகப்பெரிய பலம் இசை, முழுக்கவே செம மாஸா தனித்தனியா ஒவ்வொரு Portionக்கும் தீம் போட்டு தள்ளியிருக்காங்க‌. கூடவே Stylishஆன Cinematography வேற.
Django remains me of Kabali interms of things like Searching & Finding of wife by husband, Redemption,Waltz's look & costumes had resemblance of Kabali Characterization etc. இதுல Action Block ஒவ்வொன்னும் அடிப்பொலி‌. சும்மாவே Tarantino படத்துல Gun விளையாடும் ரத்தம் தெறிக்கும், இது Cow-boy kinda Genre வேற சொல்லவா வேணும். மனுஷன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடி இருக்காப்படி‌‌.
சினிமா ங்கற கலை நம்ம அறிவை வளர்க்கறது மட்டும் பயன்படுறது இல்ல. அது நம்ம அறிவை Update பண்ணிக்கவும், ஒரு விஷயத்தை இன்னும் அகலமாக பரந்து பார்க்கவும் வைக்குது‌, பல விஷயங்கள ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா தெளிவு படுத்தி பாக்கவும் வைக்குது.

- Prem ❤

Sunday, August 9, 2020

The Before Trilogy :


காதலர்களுக்கு வயது ஆகலாம். ஆனால் காதலுக்கு வயதாகாது என்பது மானுடவியல் வழக்கம். Fall in love, Being in love, Moving in love என காதலின் பரிமாணங்களை யார் வேண்டுமானாலும் நிஜத்தில் அனுபவிக்கலாம். அந்நிலைகளை திரை வழியாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து - மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களை பொருத்தி - காதலில் திளைக்க வைத்து - அவர்களின் மகிழ்ச்சியை நமக்கும் கடத்தி - நம்மையும் சிரிக்க அழ வைத்து - நமக்குள் இருக்கும் பிரிந்த காதல்,தொலைந்த காதல்,மறந்த காதல்,கூடிய காதல் என பல்வேறு காதல்களை நினைத்து பார்க்க வைக்க வெளிவந்த படங்களே Before Sunrise (1995), Before Sunset (2004) and Before Midnight (2013).
Jessie & Celine இருவரும் ரயிலில் முதன் முறையாக சந்திக்கிறார்கள். Casual ஆக பேச ஆரம்பிக்கிறார்கள் - பேசுகிறார்கள் - பேசி கொண்டே இருக்கிறார்கள் - பேசிப்பேசி பொழுதை கழிக்கிறார்கள் - நகர்வலம் வருகிறார்கள்‌‌. உரையாடல் வழியாக தங்கள் வாழ்வின் நடந்தவைகளை, தங்களின் ஆசைகளை, கருத்துக்களை நம் எண்ணங்களில் கிளைகதைகளாய் பரவ விடுகிறார்கள். அதன் பிறகு தங்களின் உறவை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதே மூன்று பாகங்கள்.
காதலை கொண்டாடுதல் என்பது தனி கலை. அப்படிப்பட்ட கலையின் மேன்மையை அதிரிபுதிரியான நிகழ்ச்சிகளை அடுக்கி Complexity சம்பவங்களால் கதையை நகர்த்தாமல் 'பேச்சுத்துணை' என்ற Conceptஜ வைத்து கனவில் நிஜமாய் நிஜத்தில் கனவாய் வசனங்களை நிறைத்து சிறு பயணமாய் போல் மென்மையாக்கி இருப்பதே இப்படங்களின் சிறப்பு.
பல Single Shot காட்சிகள். அதில் இருவரும் மட்டுமே பேசி கொள்ளும் உரையாடல் போன்ற வசனங்கள். நடிப்பு என சொல்ல முடியாத அளவுக்கு நிஜ காதலர்களாய் வாழ்ந்த இருவர். அருமையான Backdrop லொக்கேஷன்கள். நேர்த்தியான எழுத்து & இயக்கம். இவை அனைத்தும் தான் இந்த Trilogy க்கு உயிர் கொடுத்திருக்கும் பங்களிப்புகள்.
நம்மை கொண்டாடுபவர்கள் நம் அருகில் இருத்தலிலும் வாழ்க்கை முழுவதும் உடன் பயணித்தலிலும் தான் வாழ்வின் சிறப்பே இருக்கிறது. அதற்கு பெரும் பங்காய் காதல் அமைகிறது‌. இந்த கருத்துடன் Positivity விதைக்கும் விதமாக ஒருவர் நினைத்து பார்க்க Sweet Memories, Bitter Sweet Memories என காதலில் பல்சுவை உள்ளது என்ற மகோத்துவத்தை நமக்குள் விதைக்கும் படைப்பாகவே இந்த Trilogy உள்ளது.
Spread Love ❤
-Prem ❤

Wednesday, July 29, 2020

M. Night Shyamalan's Triology Movies :


It is very tough to handle psychological things in one script & executes it in a very well crafted manner. But this man succeeded with all these elements perfectly in three different parts repeatedly & efficiently. First part of this Triology named UNBREAKABLE released in 2000, second installation SPLIT came after 16 years of prior (2016) & third one GLASS released on 2019.

As a recent watcher of all these movies, for me 'Unbreakable' set up premise on what it's gonna be, 'Split' adds more hype & 'Glass' fulfilled my expectations. Satisfactory Graph increased at peak over each part & got mind orgamized highly.

What I have analysed in his working style is - He started story telling by blind folding the audience & revealing the knots with bunch of surprises throughout the film. Liked the way he connects/ differentiates two extreme characters in first part and introduces yet another ironical character in second part & gave justified conclusion for all those in final part.

He is very much brilliant in creating three different characters, setup backstory for them, added their own point of view,assembling them, holding them, them, confronting them, behaving them & finally concluded them.

For executing this kinda complexity writing, one hardly needs brilliant actors to understand the whole process of what they are going to be to, absorbs the need & nature of the demand for their characterization, knows what to perform on screen. For matching all these criteria, three brilliant performers Samuel L.Jackson,Bruce Wills,James McAvoy fitted themselves in script & they did extraordinary job both physically and mentally. I was astonished by all of their performance.

Not only actors- well made technical aspects like hard hitting dialogues, haunting music, raw cinematography also makes this Triology masterpiece.

M.Night Shyamalan - A Mastermind Creator.

- Prem 

Sunday, July 26, 2020

Parava 🐦 (2017) - Malayalam



படத்தின் மையப்புள்ளி புறாக்கள்.அந்த புறாக்களை சுற்றி வாழும் பல விதமான குணாதிசயம் கொண்ட மனிதர்கள்.அந்த மனிதர்களை பின்னி பிணைக்கும் காதல்,நட்பு, பகை,உறவு,போட்டி என புதியதொரு கதைக்களத்தில் பயணிக்கும் மற்றொரு feel good மலையாள திரைப்படம்.

கேரளாவில் இயற்கை பகுதியை விடுத்து இதில் கொச்சியில் இருக்கும் Mattenchery (மட்டன்சேரி) என்னும் நகரத்தில் கூட்டாக ஒரு பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் வாழ்வியலில் உள்ள குடும்பம்,தொழில்,கிரிக்கெட், கேரம், உணவு, விழாக்கள், இண்டு இடுக்களிலுள்ள குடியிருப்புகள், செல்ல பிராணிகள் என எல்லாவற்றையும் பேசுகிறது இப்படைப்பு.

எந்த பிரச்சனை வந்தாலும் அதை மறந்து விட்டு அடுத்த சந்தோஷத்தில் மூழ்கும் இரண்டு சிறுவர்கள், ஒரு பிரச்சினையால் தன் வாழ்க்கையை வெறுத்து தனிமையில் வாழும் Introvert ஆக மாறிப்போன இளைஞன், மகன்கள் மேல் கண்டிப்பும் அக்கறையும் நிறைந்த அப்பாக்கள், அன்பு நிறைந்த அம்மாக்கள், கும்பலாக சுற்றும் நண்பர்கள், அந்த கும்பலுக்கு தலைமை ஏற்று மற்ற நண்பர்களுக்கு சகோதரனாய் இருக்கும் சக நண்பன், போதை பழக்கத்தில் அடிமையான கூட்டம் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மை ஈர்க்கிறது.

புறா வளர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள், அதை பேணி பாதுகாத்தல், அதை வைத்து நடத்தப்படும் Tournament (பந்தயம்), பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் infatuation, சிறு வயது- இளமை கால - முதிர் பருவ நட்பு வட்டம், பட்டம் விடுவதற்கு பயன்படும் மாஞ்சா நூல் தயாரிக்கும் முறை, இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறை என படத்தில் சொல்ல பட்ட விஷயங்கள் அனைத்தும் புதுமை.

முதல் காட்சியில் மற்றோரு வீட்டில் இருந்து மீனை திருடி வரும் சிறுவர்கள் படத்தின் இறுதி காட்சியில் வேறோரு வீட்டில் நாய் குட்டியை சேர்த்து விடுவது போல் அமைத்ததில் தெரிகிறது எழுத்தாளர்+ இயக்குனரின் திறமை..
Parava - Yet another feel good Malayalam movie which deals with emotions & culture among certain area people..

- Prem

Saturday, July 18, 2020

நீ நான் சிவம்

அன்பே சிவம் (2003) :

படத்தில் ஒரு காட்சியில் மாதவன் குளிப்பதற்காக ஷவரை(Shower) திறப்பார், loose ஆக இருக்கும் அந்த ஷவரின் Nozzle(முனை) கழன்று நச் என்று அவர் மண்டையில் விழும், வெளியில் இருந்து கமல் அந்த nozzle  பற்றி முன் எச்சரிக்கை செய்து கொண்டிருப்பார். அது போல் தான் கமல் என்னும் திரைக்கலைஞன் படம் முழுக்க அன்பையும் மனிதத்தையும் நம் மண்டையில் நச் என்று விழுவது போல் நன்றாக உரைக்கும் படி சொல்லிக்கொண்டே இருப்பார்.

எனக்கு அன்பு பிடிக்காது என ஆரம்பத்தில் சொல்லும் அன்பரசு இறுதியில் நல்ல சிவத்தை தன் அண்ணணாக ஏற்று கொள்ளவதே அன்பே சிவம். கடவுள் என தனியாக ஒன்று தேவையில்லை சக உயிர்களிடத்தில் அன்பை காட்டுபவர்கள் யாவரும் கடவுளே என்பதை பல்வேறு நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் மூலம் கமல் என்னும் மகா கலைஞன்.

படத்தில் கம்யூனிசம் பற்றிய கருத்துக்கள் ஆழமாக பசுமரத்தாணிப் போல் பேச பட்டிருக்கும். தன் அனுபவ நடிப்பாலும் அசாத்திய முக பாவனைகளாளும் கமல் சிவப்பு சட்டை போட்டு கொண்டு அதை செவ்வன பேசியிருப்பார்.

செய்வது எல்லாம் செய்து விட்டு கடவுளை துணைக்கு அழைத்துக் கொள்ளும் நாசர் கதாபாத்திரத்தை வித்தியாசமாக அமைத்ததுலாம் கமலின் அக்மார்க் குசும்பு

முன்ன பின்ன தெரியாத ஒருத்தருக்குகாக அழுகற மனசு இருக்கே அது தான் கடவுள் , என்னை கொல்ல வந்துட்டு மனச மாத்தீட்டு கொல்லாம போறயே நீ தான் கடவுள் என கடவுள் என்பவர் யார்? என்பதை உணர்த்தும் மதனின் வசனத்திற்கு தன் நடிப்பால் உயிர் ஊட்டியிருப்பார் கமல்.

ஒரு விதை போட்டால் பல வருடம் கழித்தே பலன் தரும் என்பது போல் கமல் 2003 ஆண்டு போட்ட அன்பே சிவம் என்ற விதையை இன்று அதன் பலனை உணர்ந்து அனுபவித்து நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம் அன்று விதைத்தவருக்கு பேரிழப்பை தந்து...

Though it's adapted from Hollywood movie named "planes trains & automobiles", we have to appreciate Kamal's effort for bringing this movie not commercial or profitable movies.