Saturday, November 21, 2020

Aanandam (2016) :



ஒரு நெடுந்தூர தனிமையான பேருந்து பயணத்தின் போது கேட்கும் இளையராஜாவின் பாடல்கள் நம்மை தட்டி கொடுத்து - தாலாட்டி - காற்றில் மிதக்க விட்டு - விழி நினைத்து - மனதில் உள்ள ரணங்களை மறக்க செய்து - புத்துணர்வு தருவது போல ஒரு இரண்டு மணி நேர திரைப்படம் நம்மை அவ்வாறே தாலாட்டி தன்ணுணர்வில் ஆழ்த்தினால், அதற்கான விடையே ஆனந்தம்.

அன்றாடம் நம் வாழ்க்கையில் நிகழும் விஷயத்தையோ அல்லது வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஒவ்வொருவரும் கடக்கும் நிகழ்வையோ வைத்து ஒரு முழு திரைப்படமாக தருவதில் கில்லாடிகள் கேரளத்து படைப்பாளிகள். அப்படியாக  கல்லூரி மாணவர்கள் செல்லும் Industrial Visit பயணத்தையே மையமாக வைத்து நம் உணர்ச்சிகளில் விளையாடுவதே இப்படத்தின் அடிநாதம். இதில் கேரளத்தை தாண்டி மைசூர், ஹம்பி, கோவா என கதைகளம் அமைத்து அந்த ஊர்களின் பசுமையான locationகளை துணைக்கொண்டு நம் மாணவ பருவத்தை  கண் முன்னே காட்டியுள்ளனர் இந்த படத்தின் Makers. இந்த படத்தின் Makers அனைவருக்கும் இதுவே முதல் படம்.

இளமை பருவத்தில் ஆண்களுக்குள் அரும்பும் காதல், அது ஏற்படுத்தும் அலாதியான இன்பம், காதலியின் சின்னச்சின்ன சமிக்ஞைகளில் இருக்கும் ஈர்ப்பு, அழகில் விழுந்து மெய்மறக்கும் தருணம் என பல ரசனையான நுணுக்கமாக திரையில் சொல்லியிருக்கிறார்கள். காதலை மட்டுமல்லாமல் நட்பின் உன்னதத்தையும், Friends gang ன் கலாட்டா குறும்புகளையும், காதலுக்கு நட்பு உதவுவதையும், நட்பில் வரும் சிறிய ஊடல்கள் என நட்பின் அனைத்து பரிணாமங்களையும் பதிவுசெய்ய தவறவில்லை.

Positivity என்ற விஷயத்தை எந்த கலையும் நமக்குள் எளிதாக கடத்தி விடலாம், சினிமா என்ற கலை Visually & Audibly நமக்கு அதை துளிர்க்க செய்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.

உங்களின் கடந்த கால நினைவலைகளை நினைத்து பார்த்து அதில் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களையும்,  சோகங்களையும், புதைந்து கிடக்கும் குற்றவுணர்ச்சிகளையும், இப்பொழுது தெரியும் சிறுபிள்ளை தனமான நிகழ்ச்சிகளையும் மீட்டெடுக்கும் அழகான படமே ஆனந்தம்.
- Prem ❤

No comments:

Post a Comment