காணாமல் போன தன் மகள் கல்கத்தாவில் சோனாகச்சி என்ற ஏதோவொரு இடத்தில் இருக்கிறாள் என அறிந்து கமல் அங்கு செல்வதும் - நேரில் அந்த இடத்தை பார்த்து அதன் சூழ்நிலையை புரிந்தவுடன் மனதில் ஏற்படும் "பதற்றமும்" - உள்ளே சென்று தேடிய பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் தன் மகள் அங்கு இல்லை என்று "ஆசுவாச" படுவதும் - சட்டென அடுத்த நொடி தன் மகளை பார்க்க கூடாத இடத்தில் பார்க்க கூடாத கோலத்தில் பார்த்தவுடன் ஏற்படும் "வலியும்" - அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் மகள் விலகி சென்றாலும் அவளை "தழுவதும்" - பின் சுதாரித்து கொண்டு அவளை தூக்கிக்கொண்டு "பதறி" வெளியே ஓடி வருவதும் - அங்கே அவர்களை பிடித்து வைத்து கொண்டு ப்ரோக்கர் பணம் கேட்கும்போது "குமுறுவதும்" - மற்ற விலைமாதர்கள் அனைவரும் காசு திரட்டி அவனுக்கு வழங்குவதை பார்த்து "நெகிழ்ச்சி" அடைவதும் - அவர்களுக்கு கூனி குறுகி நன்றி தெரிவிப்பது என இத்தனை உணர்வுகள் நிகழ்ந்தது கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல, அந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொரு அண்ணன், தம்பி, அப்பா, மகன், கணவன்,தோழன் என அனைத்து ஆண்களுக்கும் தான்.
இவ்வளவு கனம் மிகுந்த இக்காட்சியில் மனசை ஆறுதல் படுத்துமாறு வரும் வசனம் - ஒரு விலைமாதர் அந்த பெண்ணை பார்த்து "சிரிடி. உன் தெய்வம் வந்திருக்கு , உன்னை கூட்டிட்டு போக" என்று சொல்வது தான்.
ஒருபுறம் மகள் பருவமடைந்த போது அவளை ஜெயில் கம்பி வழியாக ஆதங்கத்தோடு பார்த்த கிருஷ்ணசாமி அதே மகளை சோனாகச்சியில் ஆற்றாமையோடு பார்ப்பது என்று கமல் என்ற நடிகன் வித்தியாசம் காட்ட, மறுபுறம் பாவத்தை தொலைக்கும் கங்கை நதிக்கரையில் தன் செல்வத்தை கண்டுபிடிப்பதாக காட்சி அமைத்த திரைக்கதை ஆசிரியர் கமல் கவனிக்க பட வேண்டியவர்.
After all these Haunting moments, now Ilayaraja entered with his Harmonium music for consoling our souls & followed by Kamal in his voice singing எங்கேயோ தெக்கு திசை காணாத தூரம் தான்...
- Prem ❤
No comments:
Post a Comment