Sunday, August 23, 2020

குட்டியும் ஸ்ரீதரும் (துள்ளாத மனமும் துள்ளும் - முகவரி) :

இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான வாழ்க்கை சூழல்,காதல்,கோணங்கள் என இருந்தாலும் இருவரையும் இணைக்கும் ஒரே புள்ளி "இசை" என்பதால் என்னவோ அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள்,ஆசைகள் என இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றுகிறது (In my opinion).

எட்டு வருட சிறை தண்டனையால் தன் வாழ்க்கையை தொலைத்து சிறையில் இருந்து விடுதலை பெற்று வரும் குட்டி -
எட்டு வருடமாக இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு முயற்சித்து கொண்டிருக்கும் ஸ்ரீதர்.
இரு மனங்கள் விரும்புவதே காதல் என்பது போல்,
தன் குரலில் பாடும் பாடலால் நேரில் பார்க்காமலேயே தன் கனவுதேவதை ருக்குவை கவரும் குட்டி - ஒருமுறை சந்தித்த விஜியை தன் குரல் வளத்தால் ஹம்மிங் மூலம் கவரும் ஸ்ரீதர்.
நேரில் தவறான சூழ்நிலைகளால் தான் ஒருதலையாக காதலிக்கும் ருக்குவால் வெறுக்கப்பட்ட குட்டி - தன் கனவுக்காக நிஜ வாழ்க்கை காதலையே துறக்கும் ஸ்ரீதர்‌.
ருக்குவிற்கு கண் பார்வை போன பிறகு அவளால் அதிகம் நேசிக்கப்படும் குட்டி - தனக்கு வரும் வாய்ப்பு ஒவ்வொரு முறை தவறும் போதும் உறுதுணையாக நிற்கும் காதலில் திளைக்கும் ஸ்ரீதர்.
ருக்குவும் குட்டியும் சேர்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் வைன்ஷாப் ஓனரை தன் நன்நடத்தையால் சம்பாதித்திற்கும் குட்டி - தான் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சக மனிதரான சிடி கடைக்காரரை நன்மதிப்பை பெற்ற ஸ்ரீதர் (இந்த இரண்டு கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்யததும் மணிவண்ணன்)
அம்மா இறந்தவுடன் அவர் கண்ணை ருக்குவுக்கு தானம் செய்ய தன் கிட்னியை துறக்கும் குட்டி - அண்ணனுக்கு உடல் நலம் குன்றியவுடன் குடும்பத்தை வழிநடத்த தன் கனவையும் கொள்கைகையும் விட்டு கொடுக்கும் ஸ்ரீதர்.
பல வித போராட்டங்களுக்கு பிறகு இறுதியில் பாடல் பாடியே காதலியை கரம் பிடிக்கும் குட்டியும் பாட்டிற்கு மெட்டமைத்து இசையமைப்பாளர் ஆகும் ஸ்ரீதரும் ஜெயிப்பது இசையின் துணையாகவே.
முரணாக, ஸ்ரீதருக்கு ஏற்ப அமைந்துள்ளன இவ்வரிகள்
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே"
and
குட்டிக்கு ஏற்றவாறு "காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி".
-
Prem ❤

No comments:

Post a Comment