Saturday, October 3, 2020

நெஞ்சு பொறுக்குதில்லையே ;

பேய் படம் பார்த்தால் தான் நமக்கு பயம் வர வேண்டும் என்பதில்லை. ஆழ் மனதின் அமைதியை உருக்குலைத்து குற்ற உணர்ச்சியை கிளர்த்திவிடும் ஒரு காட்சியே போதும் அச்சம், கண்ணிர், மனச்சிதைவு என எல்லாவற்றையும் உள்ளுக்குள் இருந்து எடுத்து பிரளயம் போல் வெடிக்க செய்து விடலாம். அப்படி அமைந்த காட்சியே மகாநதியில் கமல் தன் மகளை விபச்சார விடுதியில் இருந்து மீட்டு வரும் காட்சி. "மகாநதி" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு முதலில் அந்த காட்சியும், அதனால் ஏற்படும் சலனமும் வேதனையும் தான் நமக்குள் இருக்கும் மனிதத்தை துளிர்க்க செய்வதும், ஆண் என்ற அகந்தையை அசைத்து பார்ப்பதும்‌.

காணாமல் போன தன் மகள் கல்கத்தாவில் சோனாகச்சி என்ற ஏதோவொரு இடத்தில் இருக்கிறாள் என அறிந்து கமல் அங்கு செல்வதும் - நேரில் அந்த இடத்தை பார்த்து அதன் சூழ்நிலையை புரிந்தவுடன் மனதில் ஏற்படும் "பதற்றமும்" - உள்ளே சென்று தேடிய பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் தன் மகள் அங்கு இல்லை என்று "ஆசுவாச" படுவதும் - சட்டென அடுத்த நொடி தன் மகளை பார்க்க கூடாத இடத்தில் பார்க்க கூடாத கோலத்தில் பார்த்தவுடன் ஏற்படும் "வலியும்" - அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் மகள் விலகி சென்றாலும் அவளை "தழுவதும்" - பின் சுதாரித்து கொண்டு அவளை தூக்கிக்கொண்டு "பதறி" வெளியே ஓடி வருவதும் - அங்கே அவர்களை பிடித்து வைத்து கொண்டு ப்ரோக்கர் பணம் கேட்கும்போது "குமுறுவதும்" - மற்ற விலைமாதர்கள் அனைவரும் காசு திரட்டி அவனுக்கு வழங்குவதை பார்த்து "நெகிழ்ச்சி" அடைவதும் - அவர்களுக்கு கூனி குறுகி நன்றி தெரிவிப்பது என இத்தனை உணர்வுகள் நிகழ்ந்தது கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல, அந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொரு அண்ணன், தம்பி, அப்பா, மகன், கணவன்,தோழன் என அனைத்து ஆண்களுக்கும் தான்.

இவ்வளவு கனம் மிகுந்த இக்காட்சியில் மனசை ஆறுதல் படுத்துமாறு வரும் வசனம் - ஒரு விலைமாதர் அந்த பெண்ணை பார்த்து "சிரிடி. உன் தெய்வம் வந்திருக்கு , உன்னை கூட்டிட்டு போக" என்று சொல்வது தான்.

ஒருபுறம் மகள் பருவமடைந்த போது அவளை ஜெயில் கம்பி வழியாக ஆதங்கத்தோடு பார்த்த கிருஷ்ணசாமி அதே மகளை சோனாகச்சியில் ஆற்றாமையோடு பார்ப்பது என்று கமல் என்ற நடிகன் வித்தியாசம் காட்ட, மறுபுறம் பாவத்தை தொலைக்கும் கங்கை நதிக்கரையில் தன் செல்வத்தை கண்டுபிடிப்பதாக காட்சி அமைத்த திரைக்கதை ஆசிரியர் கமல் கவனிக்க பட வேண்டியவர். 

After all these Haunting moments, now Ilayaraja entered with his Harmonium music for consoling our souls & followed by Kamal in his voice singing எங்கேயோ தெக்கு திசை காணாத தூரம் தான்...

- Prem ❤

Sunday, September 27, 2020

பரியனை சுற்றியுள்ள மனிதர்கள் :


சாதியும் அதன் படிநிலைகளும் கட்டமைப்பும் உள்ள சமூக சூழலில்,கிராமத்திலிருந்து இருந்து கல்லூரிக்கு சட்டம் படிக்க வருகிறான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவனான பரியன். அவனை சக மனிதனாக பார்த்து ஆதரிக்கும் மனிதர்களும், அவனின் சாதியை முன்னிறுத்தி வெறுக்கும் சாதிவெறியர்களும் - இவர்களின் தாக்கமும் தான் அவன் படித்து பட்டம் பெறுகிறானா?இல்லையா? என்று தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட இருவேறு தன்மை கொண்டவர்களின் முகங்கள் :

அன்பு மட்டுமே நிறைந்த ஜோ. பரியனின் தோழி, தேவதை. தன்னை சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாதி சாக்கடையை பற்றி அறியாத ஒரு நல்ல மனசுக்காரி.

தன் சாதியில் உள்ள சக மிருகங்களுக்கு பயப்பட்டு பரியனிடம் " உன் கூட சேர்த்து என் பொண்ணையும் கொண்ணு போட்றுவானுக" என மகளின் காதலை ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மதில் மேல் பூனையாக சாதிப்பற்றுடன் வாழும் ஜோவின் தந்தை.

தன் மீதும் அரசியல் மூலமாக சாதி பின்னப்பட்டிருந்தாலும் அதை எல்லாம் பார்த்து பழகாமல் பரியனுக்கு உண்மையான நண்பனாக வரும் யோகிபாபு‌.

"அம்பேத்கர் மாதிரி ஆக வேண்டும்" என பரியன் சொன்னவுடன் அவனை கலகக்காரனுக்கு மேலே பார்க்கும் ஒரு 'வகையான' கல்லூரி முதல்வர் & அதே வார்த்தையை படித்தவுடன் பரியனை அழைத்து படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லி சமன் செய்யும் மற்றோரு 'வகையான' முதல்வர்.

கோட்டாவில் வந்ததை பொறுத்து கொள்ள முடியாமல் அதை குத்தி காட்டும் Male ஆங்கில ஆசிரியர் &" காலத்துக்கும் BABL மேல கோடு வராம பாத்துக்கோ" என கரிசனத்துடன் சொல்லும் தேவதை டீச்சர்‌. இந்த முரணானது பரியன் பிற்காலத்தில் பிரச்சனையில் ஈடுபடும்போது ஆங்கில ஆசிரியர் முதல்வரிடம் அவனை சஸ்பெண்ட் செய்ய சொல்வதும் & தேவதை டீச்சரோ "என்ன சார் நீங்களே அவனை என்ன வேணாலும் பண்ண சொல்றீங்க, சண்டை போட போறான்" என ஆதங்க படும் போதும் கூட வெளிப்படும்‌.

காலகாலமாக தொடர்ந்து ஆணவக்கொலையை ஒரு சேவை போல் செய்து கொண்டிருக்கும் சாதிதிமிர் நிறைந்த ஒரு பழங்கால தாத்தா.

இவர்கள் ஒவ்வொரும் பரியனை கையாளும் விதத்தில் தான் அவன் சமாதானம் அடைவதும்,எதிர்ப்பதும்,திருப்பி அடிப்பதும் என படம் கூறுகிறது. If equality is denied everything is denied என்ற சூழலே பரியனை 'நான் யார்?' என கேள்வி கேட்க வைக்கிறது. இதன் நீட்சியே கிளைமேக்ஸில் டீ டம்ளர் மூலமாக "அனைவரும் சமம்" என உண்மையை உணர்த்துகிறது.
 - Prem ❤

Thursday, September 10, 2020

Charlie & Neelakasham Pachakadal Chuvanna Bhoomi (NPCB) :

தேடல் - பிறந்தது முதல் இறப்பது வரை மனிதன் வாழ்க்கையில் எதாவது ஒன்றை தேடிக் கொண்டே இருக்கின்றான்.

பயணம் - தன்னை தானே உணர்ந்து கொள்ளவும் வாழ்க்கையில் புதுவிதமான அனுபவம் பெறவும் பயணம் மேற்கொள்கிறான்.

தேடலையும் பயணத்தையும் வேறொரு குறிப்பிட்ட நபருக்காக அர்பணித்து ஒருவருக்கு கிடைக்கும் தன்னுணற்வை பற்றியே சார்லியும் NPCBயும் கவித்துவமான காட்சிகளால் பேசுகிறது.

சார்லி என்ற முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவனை பற்றி தனக்கு கிடைத்த குறிப்பு புத்தகத்தின் வாயிலாக அவனை பற்றி தெரிந்து கொண்டும் மற்றவர்கள் செவி வழியாக சொல்வதை கேட்டும் அவன் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டு அவனை தேடி செல்கிறாள் டெஸ்ஸா. சார்லியால் உதவி பெற்ற பலர் வாயிலாக சார்லியின் குணத்தை பற்றி தெரிந்து கொண்டு அவள் மீது காதல் வயப்படுகிறாள். அவனை சந்திக்கும் தருணத்தில் அவளது தேடலுக்கும் காதலுக்கும் விடையே Charlie.

தன் காதலியை தேடி கேரளாவில் இருந்து நாகலாந்திற்கு Road travel மூலமாக பயணப்படுகிறான் கசிம். தான் செல்லும் வழியில் அவனை போலவே Road trip மேற்கொள்ளும் ஒரு நண்பர்கள் குழு, கொல்காத்தவில் உள்ள குறுநில கிராம மக்கள், கொல்கத்தா தாண்டி ஒரு நெடுஞ்சாலையில் தனியாய் சைக்கிள் கடை நடத்தும் மலையாளி, அஸ்ஸாமில் கலவரத்தில் மாட்டிக்கொண்ட சிறுமி என ஒவ்வொரு மனிதர்களும் கசிமின் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த தாக்கங்களோடு தன் காதலியுடன் சேர்ந்தானா? என்பதை பேசுகிறது NPCB.

படங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இந்த இரண்டு முதன்மை கதாபாத்திரங்களும் அவர்களின் பயணங்களில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் வாழ்வியலும், தேடலில் இவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், அடையும் ஆனந்தங்களும், நீண்ட தூர பாதைகளும், இவர்களின் இலக்குகளும் என இரு படங்களுமே வாழ்வின் நிதர்சனமான தத்துவங்களை பற்றி பேசுகிறது.

ஆணை தேடி ஒரு பெண்ணும் பெண்ணை தேடி ஒரு ஆணும் என இருபாலரும் தங்களின் Perceptionல் கதையை நகர்த்துவதும், தங்கள் உள் மனத்தில் பேசிக்கொண்டே அகத்தை உணர்ந்து கொள்வதும், வாழ்க்கையின் அர்த்தத்தை தாங்கள் மேற் கொள்ளும் பயணங்களில் புரிந்து கொள்வதும் என நம்மை அந்த கதாபாத்திரங்களினூடே எளிதாக இணைத்து கொள்ள முடிகிறது. 

Yet another feel good Movies from Malayalam Film Industry 👌.
- Prem ❤

Thursday, September 3, 2020

Ustad hotel (2012) Malayalam :


"வயிறு நிறையற மாதிரி யாரு வேணாலும் சமைக்கலாம். ஆனா சாப்பிடறவன் மனசும் நிறையனும்".

 - படத்தில் வரும் வசனம். இதுவே இப்படத்தின் அடிநாதம். கேரளாவும், அந்த மக்களின் உணவின் ரசனையும், சமைக்கும் விதமும்,கைப்பக்குவமும்,ஈகை குணமும்,கடலும்,அன்பும்,நட்பும் என படம் பேசும் பேசு பொருட்கள் ஏராளம். கூடவே தாத்தாவிற்கும் பேரனுக்குமான உன்னத உறவை மென்மையாக சொல்லியிருக்கிறார்கள் ஸ்கிரிப்ட் எழுதிய அஞ்சலி மேனனும் இயக்குனர் அன்வர் ரஷிதும்.

'உஸ்தாத்' என்றால் மாஸ்டர் என்று மலையாளத்தில் பொருள். அதற்கேற்ப ஒரு கடற்கறையோரம் இருக்கும் உணவகத்தை நடத்திக் கொண்டிருக்கும் வயதான முதலாளிக்கு உணவின் பாலுள்ள பற்று,ஈடுபாடு,அக்கறை என உணவுக்கும் மனிதனுக்கும் உள்ள காதலை படம் கவித்துவமாக வெளிப்படுத்துகிறது. சமையல் கலையின் மேலுள்ள உணர்வை இவ்வளவு துல்லியமாக வேறு எந்த நடிகனாலும் வெளிப்படுத்த முடியாது. திலகன் என்ற சிறந்த நடிகன் கரீம் இக்காவாக வாழ்ந்து காட்டினார். இதுவே அவரின் கடைசி படம்.

பிடித்தது செய்ய முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் பகட்டான வாழ்க்கையை தூக்கி எறிந்து சொந்த நாட்டிற்கு வந்து மனதுக்கு பிடித்த Chef வேலை பார்த்து தன் தாத்தாவின் பாரம்பரியத்தை தொடரும் இளைஞன் துல்கர் சல்மான் தன் அப்பாவிற்கும் தாத்தாவுக்கும் இடையே உறவுகளின் மேன்மையை நிலை நிறுத்துகிறார். 

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பசியால் வாடும் மனிதர்களுக்கு உணவு வழங்குதலின் மேன்மையையும் தேவையையும் உணர்த்தும் விதமான காட்சிகளும் படத்தில் உண்டு. 

படம் முழுக்கவே உணவு தான் பிரதான அம்சமாய் சுழன்று கொண்டிருக்கிறது. பிரியாணி, சுலைமாணி(கட்டஞ்சாயா), அசைவங்கள் என பல்வேறு விதமான உணவுகள் பற்றியும் படத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டுகிறது. இதற்கேற்ப வசனங்களும், ஒளிப்பதிவும், இசையும் துணை நின்றிருக்கிறது‌.

படத்தில் வரும் மற்றொரு Heart touching உண்மையான வசனம் :

"பெரும்பாலும் மனித உயிர்கள் எந்த விஷயத்திலும் திருப்தியடைய மாட்டார்கள். மேலும் மேலும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சாப்பாட்டு விஷயத்தில் அப்படி இல்லை. ஒருவரின் வயிறு நிரம்பி விட்டால், போதும் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்".

Ustad Hotel - பல உண்மைகளை பிரதிபலிக்கும் படைப்பு‌.

- Prem ❤

Sunday, August 23, 2020

குட்டியும் ஸ்ரீதரும் (துள்ளாத மனமும் துள்ளும் - முகவரி) :

இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான வாழ்க்கை சூழல்,காதல்,கோணங்கள் என இருந்தாலும் இருவரையும் இணைக்கும் ஒரே புள்ளி "இசை" என்பதால் என்னவோ அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள்,ஆசைகள் என இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றுகிறது (In my opinion).

எட்டு வருட சிறை தண்டனையால் தன் வாழ்க்கையை தொலைத்து சிறையில் இருந்து விடுதலை பெற்று வரும் குட்டி -
எட்டு வருடமாக இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு முயற்சித்து கொண்டிருக்கும் ஸ்ரீதர்.
இரு மனங்கள் விரும்புவதே காதல் என்பது போல்,
தன் குரலில் பாடும் பாடலால் நேரில் பார்க்காமலேயே தன் கனவுதேவதை ருக்குவை கவரும் குட்டி - ஒருமுறை சந்தித்த விஜியை தன் குரல் வளத்தால் ஹம்மிங் மூலம் கவரும் ஸ்ரீதர்.
நேரில் தவறான சூழ்நிலைகளால் தான் ஒருதலையாக காதலிக்கும் ருக்குவால் வெறுக்கப்பட்ட குட்டி - தன் கனவுக்காக நிஜ வாழ்க்கை காதலையே துறக்கும் ஸ்ரீதர்‌.
ருக்குவிற்கு கண் பார்வை போன பிறகு அவளால் அதிகம் நேசிக்கப்படும் குட்டி - தனக்கு வரும் வாய்ப்பு ஒவ்வொரு முறை தவறும் போதும் உறுதுணையாக நிற்கும் காதலில் திளைக்கும் ஸ்ரீதர்.
ருக்குவும் குட்டியும் சேர்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் வைன்ஷாப் ஓனரை தன் நன்நடத்தையால் சம்பாதித்திற்கும் குட்டி - தான் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் சக மனிதரான சிடி கடைக்காரரை நன்மதிப்பை பெற்ற ஸ்ரீதர் (இந்த இரண்டு கடைக்காரர் கதாபாத்திரத்தை செய்யததும் மணிவண்ணன்)
அம்மா இறந்தவுடன் அவர் கண்ணை ருக்குவுக்கு தானம் செய்ய தன் கிட்னியை துறக்கும் குட்டி - அண்ணனுக்கு உடல் நலம் குன்றியவுடன் குடும்பத்தை வழிநடத்த தன் கனவையும் கொள்கைகையும் விட்டு கொடுக்கும் ஸ்ரீதர்.
பல வித போராட்டங்களுக்கு பிறகு இறுதியில் பாடல் பாடியே காதலியை கரம் பிடிக்கும் குட்டியும் பாட்டிற்கு மெட்டமைத்து இசையமைப்பாளர் ஆகும் ஸ்ரீதரும் ஜெயிப்பது இசையின் துணையாகவே.
முரணாக, ஸ்ரீதருக்கு ஏற்ப அமைந்துள்ளன இவ்வரிகள்
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே"
and
குட்டிக்கு ஏற்றவாறு "காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி".
-
Prem ❤

Monday, August 17, 2020

Django Unchained

 Rewatched Django Unchained after 5 years. சிறப்பான தரமான சம்பவம் From Quentin Tarantino.

முன்னமே பாக்கும் போதே Engagableஆ இருந்துச்சு. இப்போ ஒவ்வொண்ணா புரிதலோட தெரிஞ்சுகிட்ட உலக விஷயங்கள் like Black-White பின்னாடி இருக்க நிறவெறி, Politics behind usage of the word 'Niggar', Slavery on oppressed people, மனுஷன மனுஷனே ஒதுக்கி வைக்கிறது, Knowledge about Knowing QT style of ரத்தம் தெறிக்கும் film making, Samuel L Jackson ஓட other performance லாம் பத்தி புரிஞ்சுகிட்டு இப்போ பாக்கும் போது நிறைய விஷயங்கள் புலப்படுத்து.
படத்துல வர மாஸான Performance க்கு Jamie Foxx , கிளாசான Performanceக்கு. Christoph Waltz, வில்லத்தனமான role க்கு Leonardo DiCaprio & Samuel Jackson னு அட்டகாசமான Casting. DiCaprio வில்லனா இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம். படத்துக்கு மிகப்பெரிய பலம் இசை, முழுக்கவே செம மாஸா தனித்தனியா ஒவ்வொரு Portionக்கும் தீம் போட்டு தள்ளியிருக்காங்க‌. கூடவே Stylishஆன Cinematography வேற.
Django remains me of Kabali interms of things like Searching & Finding of wife by husband, Redemption,Waltz's look & costumes had resemblance of Kabali Characterization etc. இதுல Action Block ஒவ்வொன்னும் அடிப்பொலி‌. சும்மாவே Tarantino படத்துல Gun விளையாடும் ரத்தம் தெறிக்கும், இது Cow-boy kinda Genre வேற சொல்லவா வேணும். மனுஷன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடி இருக்காப்படி‌‌.
சினிமா ங்கற கலை நம்ம அறிவை வளர்க்கறது மட்டும் பயன்படுறது இல்ல. அது நம்ம அறிவை Update பண்ணிக்கவும், ஒரு விஷயத்தை இன்னும் அகலமாக பரந்து பார்க்கவும் வைக்குது‌, பல விஷயங்கள ஒவ்வொரு தடவையும் புதுசு புதுசா தெளிவு படுத்தி பாக்கவும் வைக்குது.

- Prem ❤

Sunday, August 9, 2020

The Before Trilogy :


காதலர்களுக்கு வயது ஆகலாம். ஆனால் காதலுக்கு வயதாகாது என்பது மானுடவியல் வழக்கம். Fall in love, Being in love, Moving in love என காதலின் பரிமாணங்களை யார் வேண்டுமானாலும் நிஜத்தில் அனுபவிக்கலாம். அந்நிலைகளை திரை வழியாக இரண்டு கதாபாத்திரங்களை வைத்து - மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களை பொருத்தி - காதலில் திளைக்க வைத்து - அவர்களின் மகிழ்ச்சியை நமக்கும் கடத்தி - நம்மையும் சிரிக்க அழ வைத்து - நமக்குள் இருக்கும் பிரிந்த காதல்,தொலைந்த காதல்,மறந்த காதல்,கூடிய காதல் என பல்வேறு காதல்களை நினைத்து பார்க்க வைக்க வெளிவந்த படங்களே Before Sunrise (1995), Before Sunset (2004) and Before Midnight (2013).
Jessie & Celine இருவரும் ரயிலில் முதன் முறையாக சந்திக்கிறார்கள். Casual ஆக பேச ஆரம்பிக்கிறார்கள் - பேசுகிறார்கள் - பேசி கொண்டே இருக்கிறார்கள் - பேசிப்பேசி பொழுதை கழிக்கிறார்கள் - நகர்வலம் வருகிறார்கள்‌‌. உரையாடல் வழியாக தங்கள் வாழ்வின் நடந்தவைகளை, தங்களின் ஆசைகளை, கருத்துக்களை நம் எண்ணங்களில் கிளைகதைகளாய் பரவ விடுகிறார்கள். அதன் பிறகு தங்களின் உறவை எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதே மூன்று பாகங்கள்.
காதலை கொண்டாடுதல் என்பது தனி கலை. அப்படிப்பட்ட கலையின் மேன்மையை அதிரிபுதிரியான நிகழ்ச்சிகளை அடுக்கி Complexity சம்பவங்களால் கதையை நகர்த்தாமல் 'பேச்சுத்துணை' என்ற Conceptஜ வைத்து கனவில் நிஜமாய் நிஜத்தில் கனவாய் வசனங்களை நிறைத்து சிறு பயணமாய் போல் மென்மையாக்கி இருப்பதே இப்படங்களின் சிறப்பு.
பல Single Shot காட்சிகள். அதில் இருவரும் மட்டுமே பேசி கொள்ளும் உரையாடல் போன்ற வசனங்கள். நடிப்பு என சொல்ல முடியாத அளவுக்கு நிஜ காதலர்களாய் வாழ்ந்த இருவர். அருமையான Backdrop லொக்கேஷன்கள். நேர்த்தியான எழுத்து & இயக்கம். இவை அனைத்தும் தான் இந்த Trilogy க்கு உயிர் கொடுத்திருக்கும் பங்களிப்புகள்.
நம்மை கொண்டாடுபவர்கள் நம் அருகில் இருத்தலிலும் வாழ்க்கை முழுவதும் உடன் பயணித்தலிலும் தான் வாழ்வின் சிறப்பே இருக்கிறது. அதற்கு பெரும் பங்காய் காதல் அமைகிறது‌. இந்த கருத்துடன் Positivity விதைக்கும் விதமாக ஒருவர் நினைத்து பார்க்க Sweet Memories, Bitter Sweet Memories என காதலில் பல்சுவை உள்ளது என்ற மகோத்துவத்தை நமக்குள் விதைக்கும் படைப்பாகவே இந்த Trilogy உள்ளது.
Spread Love ❤
-Prem ❤